Showing posts with label தபு சங்கர் கவிதைகள். Show all posts
Showing posts with label தபு சங்கர் கவிதைகள். Show all posts

Sunday, January 13, 2008

தபு சங்கர் கவிதைகள்

காதலிக்கும்போது
கவிதைதான் கிடைத்தது
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது

உன்னை என் வாழ்க்கைத்துணை என்று
எப்படிச் சொல்வது

எனக்கு
வாழ்க்கை
கொடுத்துக்கொண்டிருப்பதே
நீதானே !!!


- தபு சங்கர்
[திமிருக்கும் அழகென்று பெயர்]

தபு சங்கர் கவிதைகள்

சில நேரங்களில் அவள் உள்ளங்கையில்
உயிர் வாழ்கிறாய்.
சில நேரம்
அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்
அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்
அவள்
இடையில் ஊஞ்சலாடி
ஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி.

- தபு சங்கர்
[தேவதைகளின் தேவதை]